Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலுார் திரவுபதியம்மன் கோவில் ... பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் புதிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஊட்டி சுப்பிரமணிய சுவாமி, இரட்டைப் பிள்ளையார் கோவில்களில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
ஊட்டி சுப்பிரமணிய சுவாமி, இரட்டைப் பிள்ளையார் கோவில்களில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

31 ஜன
2025
05:01

ஊட்டி; ஊட்டி லோயர் பஜாரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசாமி திருக்கோயில் மற்றும் இரட்டை பிள்ளையார் கோவில்களில், மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.


இந்து சமய அறநிலையத்துறை நிர்வகித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், ஊட்டி லோயர் பஜாரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலுடன் இணைந்துள்ளது. இக்கோவிலில் இன்று காலை, 7:00 மணி முதல் 7:25 மணிக்குள் மகர லக்கனத்தில், மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி மற்றும் அனைத்து பரிவாரம் மூலமூர்த்திகளுக்கு, மக அபிஷேக அலங்காரம், தச தரிசனம், மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு, பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 4:35 மணிக்கு,வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண வைபவம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு, சுவாமியின் திருவீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


இரட்டை பிள்ளையார் கோவிலில் மகா கும்பாபிஷேகம்; இதே போல, இரட்டைப் பிள்ளையார் கோவிலில் மகா கும்பாபிஷேகம் விமர்சியாக கொண்டாடப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம், காலை, 8:00 மணி முதல், விநாயகர் வழிபாடு, மகா சங்கல்பம், புண்யாக வாஜனம், வாஸ்து சாந்தி, பேரீதாடனம், புஷ்பாண்ட பூஜை, மகாகணபதி யாகம், மகாலட்சுமி யாகம், நவக்கோள் யாகம், மக தீபாரதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 5:00 மணி முதல், விநாயகர் வழிபாடுடன், ரக்ஷா பந்தனன், கும்ப அலங்காரம், கலாகர்ஷனம், முதற்கால யாகவேள்வி, மூல மந்திர யாகம், மகா பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி இடம்பெற்றது. தொடர்ந்து, நேற்று காலை, 9:20 மணிக்கு, கடங்கள் எழுந்தருள செய்தல் நிகழ்ச்சியை அடுத்து, 9:30 மணிக்கு, கோபுர மகா கும்பாபிஷேகம் நடந்தது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சை;  உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிற்பங்கள் உயிர் பெற்றால் எப்படி இருக்கும் என சமூக ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவில் உள்ள வீரமாச்சி அம்மன் கோவிலில் திருவிழா நடக்கிறது. கிணத்துக்கடவு, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் திருப்பதி பெரிய ஜீயர் வழிபாடு செய்தார். துலா ... மேலும்
 
temple news
சிந்துவெளி மக்கள் குதிரையை அறியாதவர்கள், சிந்துவெளியில் மகாபாரதத்துக்கான சான்றுகள் இல்லை என ... மேலும்
 
temple news
புதுச்சேரி: கோரிமேடு அடுத்த இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் உள்ள ேஷத்திரபால பைரவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar