வேட்டைக்காரன் சுவாமிக்கு கிடாய்கள் வெட்டி படையல்; ஆண்கள் மட்டும் பங்கேற்று வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26பிப் 2025 11:02
நத்தம்; நத்தம் அருகே உலுப்பகுடி கிராமத்தில் வேட்டைக்காரன் சுவாமி கோவில் உள்ளது.இந்த கோவிலில் பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா பாரம்பரியமாக நடந்து வருகிறது.இந்த திருவிழா இரண்டு வாரம் நடைபெறும். முதல் திருவிழா கடந்த செவ்வாயன்று நடந்தது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான 2வது படையல் திருவிழா நேற்று நடந்தது. இதில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு மேல் சுவாமிக்கு பொங்கல் வைக்கப்பட்டு விழா தொடங்கியது.பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொடுத்த 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு நள்ளிரவு முழுவதும் கிராமத்தார்களால் 10-க்கும் மேற்பட்ட அண்டாக்களில் சமைக்கப்பட்டது. பின்னர் நேற்று சுவாமிக்கு படையல் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. பின்னர் அங்கு வரிசையில் கூடியிருந்த ஏராளமான ஆண்களுக்கு சில்வர் பாத்திரங்களிலும், டிபன்பாக்ஸ்களிலும் சாதமும்,ஆட்டுக்கறி குழம்பும் வழங்கப்பட்டது.இந்த திருவிழாவில் பெண் குழந்தை முதல் வயதான பெண்கள் வரை பங்கேற்க அனுமதி கிடையாது என்பது குறிப்பிடதக்கது.