Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேட்டைக்காரன் சுவாமிக்கு கிடாய்கள் ... அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா; பஞ்ச சிவலிங்கத்திற்கு அபிஷேகம் அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகா சிவராத்திரி; உஙகள் குலதெய்வம் எது? இன்று வழிபட மறக்காதீர்..!
எழுத்தின் அளவு:
மகா சிவராத்திரி; உஙகள் குலதெய்வம் எது? இன்று வழிபட மறக்காதீர்..!

பதிவு செய்த நாள்

26 பிப்
2025
11:02

குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் இன்றிமையாதது. இஷ்டதெய்வம் என்பது நாம் விரும்பி வழிபடும் கடவுள். எனினும், குலதெய்வம் என்பது நமது முன்னோர்களினால் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வருவது. ஆகவே, எப்படியாவது நமது குலதெய்வத்தை அறிந்து வழிபடுதல் அவசியம்.


குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குகிறோம். குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம் கூடவே இருந்து வழிகாட்டும் அருள்சக்தியாகக் கருதப்படுகிறது. சிலருக்கு தங்கள் குலதெய்வம் எதுவென்றே தெரியாமல் இருக்கும். இதனால் அவர்களுக்கு பல சோதனைகள் ஏற்படுவதாகச் சொல்வதுண்டு. இப்படி குலதெய்வம் தெரியாமல் இருப்பவர்கள் வழிபாடு செய்வதற்கென்றே அகத்தியர் பூஜித்த துர்க்கை கோவில் கும்பகோணம் அருகிலுள்ள குத்தாலத்தில் இருந்து 3 கி.மீ., தூத்திலுள்ள கதிராமங்கலத்தில் உள்ளது. கதிர் வேய்ந்த மங்கலம் என்று கவிச்சக்கரவர்த்தி கம்பர் இவ்வூரைக் குறிப்பிடுகிறார். கதிரவனின் கதிர்கள் அம்பிகையின் மீது படுவதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. இவளுக்கு ஆகாச துர்க்கை என்றும் பெயருண்டு. ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகு காலங்களில் வன துர்க்கையை வழிபாடு செய்வது சிறப்பு.


காஞ்சி மகா சுவாமிகளை தரிசிக்க வந்த பக்தர் கண்ணீருடன் “சுவாமி... எத்தனையோ கோயில்களுக்குப் போயும் என் கஷ்டம் தீர்ந்தபாடில்லை” என்றார். அருள் பொங்கும் கண்களால் பார்த்தபடி சுவாமிகள் “உன் குலதெய்வத்தை வழிபட்டாயா?” எனக் கேட்டார்.  “குலதெய்வமா... எதுவென்றே தெரியாதே” என்றார்.    “வயதான உறவினர்களை சந்தித்துப் பேசு. அவர்களுக்கு குலதெய்வம் எதுவென்று தெரிந்திருக்கும். அங்கு போனால் கஷ்டம் ’சூரியனைக் கண்ட பனி’யாக மறையும்” என்றார் சுவாமிகள். இதிலிருந்து குலதெய்வ வழிபாடு எவ்வளவு முக்கியம் என்பது தெரிகிறது. வீட்டில் விளக்கேற்றி இன்று குலதெய்வத்தை வழிபட வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
சாணார்பட்டி: - கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த வளர்பிறை பஞ்சமி ... மேலும்
 
temple news
பொங்கலுார்: ‘‘வேல் அறிவின் வடிவம். கந்த சஷ்டி கவசம் பாடினால் வீரம் பிறக்கும்; விவேகம் பிறக்கும்; இருள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar