சதுரகிரியில் மகா சிவராத்திரி வழிபாடு; பக்தர்கள் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26பிப் 2025 02:02
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மகா சிவராத்திரி வழிபாட்டில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று அதிகாலை முதல் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் திரளான பக்தர்கள் குவிந்திருந்தனர். காலை 6:00 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மதியம் 12:00 மணியை கடந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறியதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு நான்கு கால மகா சிவராத்திரி வழிபாடு பூஜைகள் நடக்கிறது. மலையடிவாரத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்தும், மொட்டை அடித்தும் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் அறநிலைத்துறையினர் செய்திருந்தனர். அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. வனத்துறை, போலீசார், தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.