விழுப்புரம்; கீழ்ப்பெரும்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் பிரசித்தி பெற்ற திரவுபதியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதத்தில், தீமிதி திருவிழா விமர்சையாக நடந்து வருகிறது. அதன்படி, 475ம் ஆண்டு தீமிதி உற்சவம் இன்று காலை 11:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவில் கொடிமரத்தில் கொடியேற்றி, திரவுபதியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும் உற்சவத்தின், முக்கிய விழாவான தீமிதி உற்சவம் ஏப்., 4ம் தேதி நடக்கிறது. விழாவில், கீழ்ப்பெரும்பாக்கம், எருமணந்தாங்கல், பொய்யப்பாக்கம், காகுப்பம், மகாராஜபுரம் உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த உபயதாரர்கள், பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.