அன்னூர்; அன்னூர் அன்பு நகரில், வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்றம் நடந்தது. அன்னூர், கோவை சாலையில் உள்ள அன்பு நகர் பகுதியில், 45 பேர் வட்டமலை ஆண்டவர் கலைக்குழுவில் கடந்த இரண்டு மாதங்களாக கும்மியாட்ட பயிற்சி பெற்றனர். இதையடுத்து 13வது அரங்கேற்ற விழா செல்வ விநாயகர் கோவில் மைதானத்தில் நடந்தது. இதில் புதிதாக பயிற்சி பெற்ற 45 பேர் ஏற்கனவே பயிற்சி பெற்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து, நாட்டுப்புறப் பாடல்களுக்கு ஏற்ப, கைகளை மேலும் கீழும் உயர்த்தி, தாழ்த்தி, நளினமாக ஆடி பார்வையாளர்களை பரவசப்பட வைத்தனர். நிகழ்ச்சியில் கலைக்குழுவின் தலைமை ஆசிரியர் செல்வராஜ், இணை ஆசிரியர்கள் முகேஷ், வருண், கார்னிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.