பதிவு செய்த நாள்
17
மார்
2025
11:03
கோத்தகிரி; கோத்தகிரி பில்லிக்கம்பை அருள்மிகு ஸ்ரீ பிஷல மாரியம்மன் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவில், சனிக்கிழமை (15ம் தேதி) பகல். 12:00 மணிக்கு, கட்டை குள்ளு பகுதியில் இருந்து, அம்மனை அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 3:00 மணிக்கு, பில்லிக் கம்பை ஊரில இருந்து, அம்மன் வனக்கோயில் புறப்பாடு நடந்தது.
முக்கிய திருவிழா நாளான நேற்று, காலை, 9:00 மணி முதல், 12:00 மணி வரை, அரக்கோல் இசை முழங்க, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பகல், 12:00 மணி முதல், 1:00 மணி வரை, கங்கை பூஜையுடன், முடிகாணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மாலை, 3:00 மணி வரை, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, கிடா வெட்டி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. இரவு, 8:30 மணிக்கு, ஸ்ரீ பாரதமாதா பஜனை சபா குழுவினரின், கார சென்னே என்னும் படுகு சமுதாய நாடகம் நடைபெற்றது. விழாவில், பில்லிக்கம்பை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். விழாவை ஒட்டி, இன்று காலை 8:30 மணி முதல், 11:30 மணி வரை, கக்கே ரய்யா கோவிலில் சிறப்பு பூஜை நடக்கிறது. பகல், 12:00 மணிக்கு, அரக்கோல் ஆட்டம் ஆட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, ஊர் தலைவர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.