பதிவு செய்த நாள்
03
ஏப்
2025
11:04
ஸ்ரீபெரும்புதுார்; ஸ்ரீபெரும்புதுாரில் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், நடப்பாண்டிற்கான சித்திரை மாத பிரம்மோத்சவம் ஏப்., 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. முதல் பத்து நாள்கள் பல்வேறு வாகனங்களில் ஆதிகேசவப் பெருமாள் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளிப்பார். விழாவின் முக்கிய நிகழ்வான, தேர் திருவிழா ஏப்., 19ம் தேதி நடைபெற உள்ளது. இதில், தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, வடம் பிடித்து தேர் இழுத்து கொண்டாடுவார்கள். இதற்காக, தேரை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. பழமை மாறாமல் தேர் புதுப்பிக்கும் பணி, வர்ணம் தீட்டும் பணிகளில், பிரத்யேக பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதை தொடர்ந்து, ஏப்., 23ம் தேதி முதல், மே 3ம் தேதி வரையில், ராமானுஜர் 1,008வது அவதார உத்சவம் நடைபெற உள்ளது.