Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மலையாண்டவர் கோவிலில் பங்குனி உத்திர ... புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலம் புத்தூர் திருபுராய்க்கல் பகவதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவ தேரோட்டம்
எழுத்தின் அளவு:
திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவ தேரோட்டம்

பதிவு செய்த நாள்

11 ஏப்
2025
03:04

திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பங்குனி பிரமோற்ஸவ விழாவை முன்னிட்டு பெரிய தேரோட்டம் நடந்தது.


திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு கடந்த ஏப்., 3 அன்று கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடி பட்டம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து பத்து நாட்களும் பல்வேறு வாகனங்களில் உற்ஸவர் கல்யாண ஜெகநாத பெருமாள் நான்கு ரத வீதிகளிலும் உலா வந்தார். இன்று காலை 9:30 மணிக்கு கோயில் அருகே உள்ள தேரடியில் 60 அடி உயரமுள்ள பெரிய தேரில் உற்ஸவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண ஜெகநாத பெருமாள் வைக்கப்பட்டு திருப்புல்லாணியில் நான்கு ரத வீதிகளிலும் பெரிய வடத்தை பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க இழுத்து வந்தனர். வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக நான்கு வீதிகளிலும் தண்ணீர் பீச்சி அடிக்கப்பட்டது. காலை 11:15 மணிக்கு இருப்பு நிலைக்கு தேர் வந்தவுடன் ஏராளமான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. வாழைப்பழம், மாம்பழம் உள்ளிட்ட கனிகள் பக்தர்களின் மீது வீசப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் உற்ஸவ மூர்த்தியை வரிசையாக தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தன்னார்வ அமைப்புகளின் சார்பில் அன்னதானம் நீர் மோர் பந்தல் உள்ளிட்டவைகள் திறக்கப்பட்டு இருந்தனர். நாளை காலை 9:00 மணிக்கு திருப்புல்லாணியில் இருந்து கருட வாகனத்தில் ஆதி ஜெகநாத பெருமாள், ஆஞ்சநேயர் வாகனத்தில் பட்டாபிஷேக ராமரும் சேதுக்கரை கடற்கரைக்கு செல்கின்றனர். அங்கு தீர்த்தவாரி உற்ஸவம் நடக்கிறது. இரவில் சந்திர பிறப்பை வாகனத்தில் வீதி உலா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
நல்லவை யாவும் நடக்கும் சிறந்த நாள் இன்று. பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar