சிவளாபுரி அம்மன் கோவில் 39ம் ஆண்டு குண்டம் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஏப் 2025 11:04
அவிநாசி; சிவளாபுரி அம்மன் கோவில் 39ம் ஆண்டு குண்டம் விழாவை முன்னிட்டு கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. அவிநாசி தாலுகா,நடுவச்சேரி ஊராட்சி ஸ்ரீ கோமளவள்ளி உடனமர் கோட்டீஸ்வர சுவாமி கோவிலுக்கு உட்பட்ட ஸ்ரீ சிவளாபுரி அம்மன் கோவிலில் 39ம் ஆண்டு குண்டம் விழாவை முன்னிட்டு நேற்று கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி மஞ்சள் நீர் கிணறு சென்று வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று குண்டம் திறப்பு,அக்னி பூ போடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் தீர்த்த குடம், பூச்சட்டி, கரகம் எடுத்து ஊர்வலமாக வரும் நிகழ்ச்சியை தொடர்ந்து வேல் பூஜை நடைபெறுகின்றது. நாளை (செவ்வாய்),குதிரை உத்தரவு பெறுதல், படைக்கலம் எடுத்து வருதல், குண்டம் இறங்குதல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது. வரும் 23ம் தேதி மறு பூஜை, மஞ்சள் நீர், அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருதல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் குண்டம் திருவிழா நிறைவு பெறுகிறது. 39ம் ஆண்டு குண்டம் விழா நாட்களில் விழாக் குழுவினர், முறைக்கட்டு மிராசுகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.