Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ‘ஆன்மிக நிலையை அடைய தன்னறிவு, ... மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா ஏழாம் நாளில் நந்திகேஸ்வரர் வாகனத்தில் வலம் வந்த சுந்தரேஸ்வரர் மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சூர் பூரம் திருவிழா துவக்கம்; நெய்தலைக்காவு பகவதி அம்மன் வருகையால் பரவசம்
எழுத்தின் அளவு:
திருச்சூர் பூரம் திருவிழா துவக்கம்; நெய்தலைக்காவு பகவதி அம்மன் வருகையால் பரவசம்

பதிவு செய்த நாள்

05 மே
2025
05:05

பாலக்காடு; பிரசித்திபெற்ற திருச்சூர் பூரம் திருவிழா துவங்கியது. கேரளா திருச்சூர் வடக்கு நாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் பூரம் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பும் வான வேடிக்கையும் மிகவும் பிரபலமானது. இன்று ஒத்திகை வானவேடிக்கை காண பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்திருந்தனர்.


இன்று காலை 9:00 மணி அளவில் நெய்தலைப் காவு பகவதி அம்மன் உருவச் சிலை குற்றூரில் இருந்து ஆடை ஆபரணங்கள் அணிந்த எர்ணாகுளம் சிவகுமார் என்ற யானை மீது ஏறி வடக்கும் நாதன் சன்னிதி நோக்கி புறப்பட்டனர். செண்டை மேளத்துடன் அம்மன் வரும் வழித்தடத்தின் இருபுறமும் பக்தர்கள் அம்மனை தரிசிக்க திரண்டு வந்திருந்தனர். 12:00 மணியளவில் மணிகண்டனாலில் வந்தடைந்த அம்மன் கணபதி கோவில் அருகே நின்றதும் செண்டை மேளம் முழங்கத் தொடங்கின.


அதை மேளதாளத்துடன் மணிகண்டனாலின் இருந்து அம்மன் வடக்கும் நாதனின் ஸ்ரீமூலஸ்தானத்திற்கு எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து 12:45 மணி அளவில் பகவதி அம்மன் வடக்குநாதர் கோவிலின் மேற்கு நடை வழியாக கோவிலுக்குள் வந்து தெற்கு கோபுர நடை வழியாக வெளியே வந்து மூன்று முறை தும்பிக்கையை உயர்த்தி திருச்சூர் பூரம் திருவிழா துவங்குவதாக அறிவிப்பதுடன் மூன்று நாள் கொண்ட திருவிழாவிற்கு ஆரம்பமாயின. நாளை (6ம் தேதி) காலை இதே கோபுர நடை வாயிலாக கணிமங்கலம் சாஸ்தா யானை மீது எழுந்தருளுவதுடன் பூரமத்தின் முக்கிய நாளின் நிகழ்ச்சிகளுக்கு ஆரம்பமாகும். திருவிழாவின் சிறப்பு அம்சமான யானைகளின் அணிவகுப்பும் குடை மாற்றவும் நாளை மாலை நடைபெறும். அதை தொடர்ந்து பிரம்மாண்ட வான வேடிக்கையும் நடைபெறும். முன்னதாக விழாவையொட்டி பாரமேக்காவு பகவதி அம்மன் கோவில் மற்றும் திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் நிர்வாகத்தினர் போட்டிபோட்டு நடத்தும் யானைகளின் ஆடை ஆபரண அலங்காரப் பொருட்களின் கண்காட்சியான "யானை சமயம்" இன்று துவங்கியது. இது நாளை நிறைவடைகிறது. இதை பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஆர்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள உப்பூர் விநாயகருக்கு இன்று இரு ... மேலும்
 
temple news
இன்று ஹரிதாள கவுரி விரதம். கவுரி விரதம் இருப்பவர்கள் சகல செல்வங்களையும் பெறுவர். இன்று சிவ சக்தியை ... மேலும்
 
temple news
கோவை; சுந்தராபுரம் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1 ல் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கம்பீர விநாயகர் ... மேலும்
 
temple news
சிவகங்கை; பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிட்டுக்கு மண் சுமந்த ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி கோயிலில் திருக்கூடல்மலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar