குறிஞ்சி நாயகி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2025 11:05
மேட்டுப்பாளையம்; குறிஞ்சி நாயகி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. மேட்டுப்பாளையம் அருகே ஜட்டையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குறிஞ்சி நகரில், குறிஞ்சி ஈஸ்வரர் கோவில் உள்ளது. இதில் குறிஞ்சி நாயகி அம்மன் சன்னதி உள்ளது. இக்கோவிலில் சித்ரா பவுர்ணமி பூஜை நடந்தது. பக்தர்கள் தீர்த்தம் மற்றும் பால் குடங்களை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்து, அம்மன் சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். பின்பு சுவாமிக்கு அலங்காரம் செய்தனர். இரவு சித்ரா பவுர்ணமி பூஜை செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.