கீழக்கரை; கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சிக்குட்பட்ட முள்ளுவாடி கிராமத்தில் உள்ள மூன்று புளி இலங்கை மாகாளியம்மன் கோயிலில் கொடை விழா நடந்தது. கடந்த மே 11 அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. மே 19., அன்று காலை கணபதி ஹோமம், திருவிளக்கு பூஜை, ஆன்மிக சொற்பொழிவு உள்ளிட்டவைகள் நடந்தது. இன்று காலை 8:00 மணிக்கு தொண்டாலை மேலக்கரை செல்வ விநாயகர் கோயிலில் இருந்து நேர்த்திக்கடன் பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர். மூலவர் இலங்கை மா காளி அம்மனுக்கு அபிஷேக அலங்கார தீபராதனைகள் நடந்தது. பூஜைகளை உத்தரகோசமங்கை அர்ச்சகர் நாகராஜன் பட்டர் செய்திருந்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் அம்மன் வீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.