பாதூர் பிரத்தியங்கரா தேவி கோவிலில் நிகும்பலா யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14டிச 2012 12:12
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரத்தியங்கரா தேவி கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு நிகும்பலா யாகம் நடந்தது. உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூரில் அபிதகுசலாம்பிகை வலமுறை அகத்தீஸ்வர சுவாமி கோவி லில் அமாவாசைதோறும் பிரத்தியங்கரா தேவி அம்மனுக்கு சிறப்பு நிகும்பலா யாகம் நடந்து வருகிறது. கார்த்திகை அமாவாசையான நேற்று காலை 10.30 மணிக்கு யாகம் துவங்கி சங்கல்பம், சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் 11.45 மணிக்கு யாககுண்டத்தில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டது. தொடர்ந்து நெய், பழ வகைகள், பால் யாககுண்டத்தில் சேர்ப்பிக்கப்பட்டன. பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற கோரி வெற்றிலையில் எழுதி கொடுத்தனர். அதனை யாக குண்டத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொட்டினார். கோவில் பரம்பரை அறங்காவலர் அருணாச்சல குருக்கள் தலைமையில் ஐந்து குருக்கள் யாகத்தை நடத்தினர். அமாவாசையையொட்டி பிரத்தியங்கராதேவி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த சிறப்பு யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.