Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news முத்துமாரியம்மன் கோயில் திருவிழா; ... திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனிப்பிரதோஷ வழிபாடு திருப்பாதிரிப்புலியூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் குவிந்த பக்தர்கள்; காத்திருந்து சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் குவிந்த பக்தர்கள்; காத்திருந்து சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

24 மே
2025
04:05

காரைக்கால்; காரைக்காலில் விடுமுறை நாட்கள் என்பதால் சனீஸ்வர பகாவன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.


புதுச்சேரி மாநில காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனிச்சன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக சனீஸ்வர பகவான் அருள்பலித்து வருகிறார். இக்கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெர்ச்சி விழா மிகவிமர்ச்சியாக நடைபெறுகிறது. இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினம் சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று சனி பிரதோஷம் மற்றும் தொடர் விடுமுறை என்பதால் திருநள்ளாறு கோவிலுக்கு இன்று அதிகாலை முதல் சென்னை, சேலம், திருச்சி,கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலத்திலிருந்து பக்தர்கள் வருகைப்புரிந்தனர். முன்னதாக பக்தர்கள் அதிகாலையில் நளன் தீர்த்தத்தில் புனித நீராடி, பின்னர் கலிதீர்த்த விநாயகரை தரிசனம் செய்து சீதர்தேங்காய் உடைந்தனர். பின்னர் கோயிலில் எள் தீபம் ஏற்றி தங்களது தோஷம் நீங்க பிரார்த்தனை செய்தனர். கட்டண தரிசனம், தர்ம தரிசனம் என்று வரிசையாக சென்று பக்தர்கள், இரண்டு மணிநேரம் காத்திருந்து சனீஸ்வரனை தரிசனம் செய்தனர். கோடை வெயில் காரணமாக  பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நீர்மோர், பிஸ்கட், தண்ணீர், அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பக்தர்கள் பாதுகாப்பு நலன் கருதி சீனியர் எஸ்.பி..லட்சுமி செளஜன்யா தலைமையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட 100க்கு மேற்பட்ட போலீசார், தன்னர்வளர்கள் பலர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar