பதிவு செய்த நாள்
28
மே
2025
03:05
புதுச்சேரி : மகா பிரத்தியங்கரா காளிக்கு அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி அபிஷேகம் நடந்தது.
புதுச்சேரி - திண்டிவனம் நான்கு வழிச்சாலையில் மொரட்டாண்டியில் மகா பிரத்தியங்கரா காளி கோவில் உள்ளது. இங்கு உலகிலேயே உயரமான 72 அடி உயரம் கொண்ட மகா பிரத்தியங்கரா காளி சிலை உள்ளது. இக்கோவிலில் உலக நன்மைக்காக அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்திக்காக மகா அபிஷேகம் இன்று காலை 6 மணிக்கு துவங்கியது. கங்கை நீர் 108 லிட்டர், 108 லிட்டர் நல்லெண்ணெய், 108 லிட்டர் கரும்பு ஜூஸ், பானகம் 108 லிட்டர், 25 கிலோ சீயக்காய் தூள், தலா 108 கிலோ பச்சரிசி மாவு, பைத்தம் மாவு, கஸ்தூரி மஞ்சள் தூள், குங்குமம், வெள்ளரி பிஞ்சு, வெள்ளரி பழம் உள்ளிட்ட 42 வகையான பொருட்களைக் கொண்டு இந்த மகா அபிஷேகம் நடந்தது. பால், வாசனை வண்ண மலர்கள், தயிர், இளநீர், எலுமிச்சம்பழம் மற்றும் நார்த்தங்காய், இனிப்பு மற்றும் கார வகைகள், பனை நொங்கு, பஞ்சாமிர்தம் பழவகைகள் கொண்டு இந்த மகா அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.