வீராணத்துார் பொன்னியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மே 2025 03:05
ஆர்.கே.பேட்டை; ஆர்.கே.பேட்டை அடுத்த வீராணத்துாரில் பொன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது. கும்பாபிஷேகத்தை ஒட்டி, கடந்த திங்கட்கிழமை புதிய விக்ரஹங்களின் கரிக்கோல ஊர்வலம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து, நான்கு கால பூஜைகள் நடந்து வந்தன. நேற்று இரவு அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இன்று காலை 9:30 மணிக்கு யாகசாலையில் இருந்து புனிதநீர் கலசங்கள், கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், வீராணத்துார் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கோவில் வளாகத்தில் குத்துவிளக்கு பூஜையுடன், பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.