சித்தரேவு மந்தையம்மன் கோயில் திருவிழா; பூஞ்சோலை சென்ற அம்மன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மே 2025 11:05
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு மந்தையம்மன் கோவில் திருவிழா நடந்தது. 15 நாட்களுக்கு முன்பு சாமி சாட்டுதல் மற்றும் காப்பு கட்டுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. முதல் நாளில் எல்லை காவல்கார சுவாமி பூஜைக்குப் பின்பு சிம்மவாகனத்தில் எழுந்தருளிய மந்தையம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டார். அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு கண் திறக்கப்பட்டு, தங்க ஆபரணங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் அம்மனுக்கு முளைப்பாரி, மாவிளக்கு, பொங்கல், அக்னிசட்டி எடுத்தல், கிடா வெட்டுதல் நடந்தன. நேற்று சிம்ம வாகனத்தில் மந்தையம்மன் முளைப்பாரி, வானவேடிக்கைகள் மற்றும் மேளதாளம் முழங்க பூஞ்சோலை சென்றடைந்தார். ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.