Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலை திருப்பதியில் பாதுகாப்பு ... உச்சி கருப்பண சுவாமி கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கனி மாற்று விழா உச்சி கருப்பண சுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவனடியாரை தேடி சிவனே வந்த மாங்கொட்டை திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
சிவனடியாரை தேடி சிவனே வந்த மாங்கொட்டை திருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

30 மே
2025
03:05

மேலூர்; மேலூரில் நடைபெறும் வைகாசி மாத மாங்கொட்டை திருவிழாவிற்கு திருவாதவூரிலிருந்து திருமறைநாதர், வேதநாயகி அம்பாள் எழுந்தருளும் திருவிழா இன்று வாஸ்து சாந்தியுடன் துவங்கியது.


நாளை மே 31 கொடியேற்றம் நடைபெறும். ஜூன் 1 முதல் 3 வரை சுவாமி வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பஞ்ச மூர்த்திகளுடன் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் ஜூன் 4 மேலூருக்கு எழுந்தருள்கிறார். இத்திருவிழா மாங்கோட்டை திருவிழா என்று அழைக்கப்படுகிறது. ஜூன் 7 திருக்கல்யாணமும், ஜூன் 8 தேரோட்டமும் நடைபெறும். ஜூன் 9 கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவுபெறும். இத்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் கிருஷ்ணன், பேஷ்கார் ஜெயபிரகாஷ் செய்திருந்தனர். 


புராண வரலாறு : ஆங்கிலேயர் காலத்தில் மேலூரில் ஒரு சிவனடியார் இருந்தார். தினமும் 8 கி.மீ., திருவாத வூருக்கு நடந்து சென்று சிவனை தரிசிப்பார். அவரது சீடராக தாசில்தார் இருந்தார். சிவனடியாருக்கு வயதானதால் திருவாதவூர் செல்ல முடியவில்லை. அதனால் தாசில்தார் மேலூரில் சிவலிங்கம் அமைத்துக் கொடுத்தும் திருவாதவூருக்கு செல்ல முடியாதது சிவனடியாருக்கு கவலையாக இருந்தது. அப்போது சிவன், சிவனடியார் கனவில் தோன்றி நீ இருக்கும் இடத்திற்கு நானே வருவேன் என கூறியுள்ளார். அதன் பேரில் திருவாதவூரிலிருந்து சுவாமிகள் மேலூருக்கு எழுந்தருளுகிறார். அதனால் தான் இன்றும் மேலூர் நுழைவாயிலில் முதல் மண்டகப்படியில் தாசில்தாருக்கு முதல் மரியாதை வழங்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கரிங்கரைப்புள்ளி காடாங்கோடு பகவதி அம்மன் கோவில் பிரதிஷ்டை தின உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; அஷ்டமி பூப்பிரதட்சனம் யொட்டி ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், உலக சாதனை முயற்சியாக, 900க்கும் மேற்பட்ட நாட்டிய ... மேலும்
 
temple news
கூடலுார்; கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடாரவல்லி திருவிழா வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை சாரல் மலையில் சாலைகளில் பாதுகாப்புக்கு இன்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar