நத்தம் - கோவில்பட்டி கைலாசநாதர் - செண்பகவல்லி அம்மன் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து ஜூன் 8ல் திருத்தேரோட்டம் நடக்கிறது.
இவ்விழாவில் கணபதி ஹோமம் நடத்தப்பட்டு மூலவர் கைலாசநாதர் செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை , மாலையில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் ஜூன் 8 காலை 7:45 மணிக்கு நடக்கிறது. மறுநாள் பூப்பல்லக்கு 10-ம் தேதி காலை உற்ஸவ சாந்தி நிகழ்ச்சியுடன் விழா நிறைவுபெறுகிறது.
கொடியேற்ற விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் முத்துகுமார்சாமி, நத்தம் பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், பழனிச்சாமி,நகர செயலாளர் ராஜ்மோகன்,வ.உ.சி. இளைஞர் பேரவை மாநில கொள்கை பரப்பு செயலாளர் சரவண செல்வம் கலந்து கொண்டனர்.