பதிவு செய்த நாள்
04
ஜூன்
2025
11:06
அயோத்தி; ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திரில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட ராமர் தர்பார் மற்றும் எட்டு கோவில்களின் பிராண பிரதிஷ்டை நாளை ஜூன் 5ல் நடக்கிறது.
ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திர் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட எட்டு கோவில்களின் புனித பிராண பிரதிஷ்டா விழாக்கள் நேற்று துவங்கியது. முதல் நாளில், ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திரின் முதல் மாடியில் உள்ள ஸ்ரீ ராம் தர்பாரின் பிரதிஷ்டைக்காகவும், சுற்றியுள்ள அஷ்ட ஆலயங்களில் உள்ள பிற தெய்வங்களுக்காகவும் யாகசாலையில் பல்வேறு வேத சடங்குகள் சம்பிரதாயபூர்வமாகத் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாளை ஜூன் 5ம் தேதி, பிராண பிரதிஷ்டை அபிஜித் முஹூர்த்தத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து காலை 11:25 மணிக்கு பிற வழிபாடுகள் நடைபெறும், அதைத் தொடர்ந்து ஆரத்தி நடைபெறும்.
அபிஜித் முஹூர்த்தம்; நாளை பிராண பிரதிஷ்டை அபிஜித் முஹூர்த்தத்தில் நடைபெற உள்ளது. அபிஜித் முஹூர்த்தம் வேதத்தில் ஒவ்வொரு நெருக்கடியையும் அல்லது தடைகளையும் அகற்றுவதற்கான நேரமாக கருதப்படுகிறது. அற்புதமான இந்த நேரத்தில் தான் ராமர் தோன்றினார். எனவே இந்த முஹூர்த்தம் சனாதன தர்மத்தில் சிறப்பு மற்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் ராமர் தரிசனத்திற்காக குவிந்து வருகின்றனர். ஜெய்ஸ்ரீராம் கோஷத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.