பதிவு செய்த நாள்
04
ஜூன்
2025
04:06
மானாமதுரை; மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் கிராமத்தில் கருப்பனேந்தல் மடத்தில் தண்டாயுதபாணி சுவாமி சன்னதி கட்ட 15 அடி ஆழத்தில் வாஸ்து பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் கிராமத்தில் கருப்பனேந்தல் மடத்தில் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி ஜீவ ஒடுக்கம் உள்ளது. இங்கு விநாயகர், முருகன் உள்ளிட்ட பல்வேறு சுவாமிகளுக்கும் தனித்தனியாக சன்னதிகள் உள்ளன. இங்கு அம்மாவாசை,பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய நாட்களில் சுவாமிகளுக்கு அபிஷேக, ஆராதனைகளும்,சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு விநாயகருக்கு கருங்கல்லினால் சன்னதி கட்டும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது தண்டாயுதபாணி சுவாமிக்கும் ரூ.55 லட்சம் செலவில் கருங்கல்லில் தனி சன்னதி கட்டுவதற்காக இன்று15 அடி ஆழத்தில் வாஸ்து பூஜை நடைபெற்றது.முன்னதாக சுவாமிகளுக்கு அபிஷேக,ஆராதனைகளும், பூஜைகளும் நடைபெற்றது.பின்னர் அன்னதானமும் நடந்தது. விழாவில் கட்டிக்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கருப்பனேந்தல் மடத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.