Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகாசி விசாகம்; பெரியகுளம் ... சாத்தமங்கலத்தில் புரவி எடுப்பு திருவிழா சாத்தமங்கலத்தில் புரவி எடுப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேட்டுப்பாளையம் முருகன் கோவில்களில் வைகாசி விசாகத் திருவிழா
எழுத்தின் அளவு:
மேட்டுப்பாளையம் முருகன் கோவில்களில் வைகாசி விசாகத் திருவிழா

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2025
04:06

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் தாலுகாவில் உள்ள, முருகர் கோவில்களில் வைகாசி விசாகத் திருவிழா நடைபெற்றது.


சிறுமுகை பழத்தோட்டத்தில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த, பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா நடந்தது. காலை 6:00 மணிக்கு கோவில் நடை திறந்து திருப்பள்ளி எழுச்சியும், அதைத் தொடர்ந்து பால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு பவானி நதியில் இருந்து, 108 குடங்களில் தீர்த்தம் எடுத்து வந்து, சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து காலை, 10:00 மணிக்கு பாலசுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடந்தது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு தாலிச் சரடு வழங்கப்பட்டது. மதியம் மூலவருக்கு அலங்கார பூஜை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டினர், கிருத்திகை வழிபாட்டு குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.


மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையோரம் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, சுப்பிரமணியர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, காலையில் கோவில் நடை திறந்து, முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து காலை 10:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அதைத் தொடர்ந்து மகா தீபாராதனையும் நடந்தது. அப்போது பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷம் எழுப்பி வழிபட்டனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே சக்தி விநாயகர் கோவிலில், பாலமுருகன் சன்னதியில் உள்ளது. வைகாசி விசாக விழாவை முன்னிட்டு, முருக பெருமானுக்கு பால், தயிர், தேன் என 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. காரமடை அருகே குருந்தமலையில் ஹிந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான, குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வனிதா மற்றும் அறங்காவலர் குழு தலைவர், அறங்காவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கரிங்கரைப்புள்ளி காடாங்கோடு பகவதி அம்மன் கோவில் பிரதிஷ்டை தின உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; அஷ்டமி பூப்பிரதட்சனம் யொட்டி ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், உலக சாதனை முயற்சியாக, 900க்கும் மேற்பட்ட நாட்டிய ... மேலும்
 
temple news
கூடலுார்; கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடாரவல்லி திருவிழா வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை சாரல் மலையில் சாலைகளில் பாதுகாப்புக்கு இன்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar