வைகாசி சனி; அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோவிலில் அனுமனுக்கு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2025 11:06
கோவை; கோவை பீளமேடு ஸ்ரீ அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோவிலில் வைகாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் பச்சை வண்ண பட்டு உடுத்தி சிறப்பு தங்க காப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
*கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி சனிக்கிழமையையொட்டி மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் மூலவர் ஸ்ரீதேவி -பூதேவி சமேதராய் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள் மற்றும் தாயாரை தரிசனம் செய்தனர்.