சேத்தூர் முத்தாலம்மன் கோவில் திருவிழா; அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2025 10:06
செந்துறை; நத்தம், செந்துறை அருகே சேத்தூர் முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு முத்தாலம்மன் ஊர்வலமாக வாணவேடிக்கைகளுடன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டு கண் திறக்கப்பட்டது. பின்னர் கோவிலுக்குள் சென்ற அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது.தொடர்ந்து நேற்று காலை பக்தர்கள் அக்னிசட்டி, அலகு குத்துதல், மாவிளக்கு,கிடாய்கள் வெட்டி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். பின்னர் மாலையில் பக்தர்கள் புடைசூழ அம்மன் பூஞ்சோலை சென்றது. விழாவில் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.திருவிழாவிற்கான ஏற்பாடுகளை சேத்தூர் ஊர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.