அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூன் 2025 04:06
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கோவிலில் இன்று காலை 10:30 மணிக்கு மேல் கொடியேற்ற நிகழ்ச்சிகள் நடந்தது. சாமிக்கு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டது. கொடி ஊர்வலமாக கோயிலை சுற்றி எடுத்து வரப்பட்டு தீபாராதனை காட்டி கொடியேற்றம் நடந்தது. 12 நாட்கள் நடக்கும் விழாவில் மீனாட்சி, சொக்கநாதர் விதவிதமான அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பர். 10 ம் நாள் விழாவாக திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். 11 ம் நாள் மாலை 4 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கும். சுவாமி அம்பாள் தேனில் அமர்ந்து ரத வீதி உலா வருவர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உறவின்முறை மண்டகப்படியார் நிகழ்ச்சி நடக்கும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.