வேதத்தை நான்காக வகுத்தவரும், பகவத் கீதை உள்ளடக்கிய மகாபாரதத்தை இயற்றியவருமான வேதவியாசரின் நினைவாக கொண்டாடப்படுவது வியாச பூஜை. குரு பரம்பரைக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான இப்பூஜை, திருக்கோவிலூர், ஸ்ரீ ஞானானந்தா நிகேதனில் உள்ள சத்சங்க மண்டபத்தில் நடந்தது. சுவாமி நித்தியானந்தகிரி அருளாசியுடன், அறக்கட்டளை தலைவர் சுவாமி பிரபவானந்த சரஸ்வதி முன்னிலையில் வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்க, வியாச பூஜையை நடத்தினர். ஞானானந்தா நிக்கேதன் அறக்கட்டளை செயலாளர் பரமேஸ்வரன், அறங்காவலர்கள் சுப்பிரமணியன், சுவாமிநாதன், வெங்கடேஷ், விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் முதல்வரும், சமஸ்கிருத பேராசிரியருமான சீனிவாசன் உள்ளிட்ட பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.