திருவாடானை; திருவாடானை அருகே அடுத்தகுடி கிராமத்தில் வீரசக்தி அம்மன் கோயில் திருவிழா ஜூலை 1ல் காப்புகட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று அதிகாலை 4:00 மணிக்கு நடந்த பூக்குழி இறங்கும் விழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர். அன்னதானம், மாலையில் மஞ்சுவிரட்டும், இரவில் கலைநிகழ்ச்சியும் நடந்தது.