Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்; ... திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி தேரோட்டம் திருத்தங்கல் நின்ற ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிந்தவாடிகுரு கோவில் குடமுழுக்கு விழா; 24 அறநிலையத் துறை அதிகாரிகள் நியமனம்
எழுத்தின் அளவு:
கோவிந்தவாடிகுரு கோவில் குடமுழுக்கு விழா; 24 அறநிலையத் துறை அதிகாரிகள் நியமனம்

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2025
05:07

காஞ்சிபுரம்; கோவிந்தவாடியில் உள்ள குரு கோவிலில், 14ம் தேதி குடமுழுக்கு நடக்க உள்ள நிலையில், 24 அறநிலையத் துறை அதிகாரிகளை நியமித்து, இணை கமிஷனர் குமரதுரை உத்தரவிட்டுள்ளார்.


காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், குரு கோவில் என அழைக்கப்படும் கைலாசநாதர் சமேத தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட பிற மாவட்டம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து, பக்தர்கள் வருகின்றனர். இக்கோவிலில், ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், வரும் 14ம் தேதி காலை 9:00 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் நடைபெறும் குடமுழுக்கு விழாவுக்கு பல்வேறு முன்னேற்பாடுகளை கிராம மக்களும், ஊராட்சி நிர்வாகமும், அறநிலையத் துறையும், போலீசாரும் செய்துள்ளனர். இதில், அறநிலையத் துறை சார்பில், யாகசாலை பூஜை, முக்கிய பிரமுகர்களை வரவேற்பது, பிரசாதம் வழங்குவது, உணவு, குடிநீர் வழங்கல், பக்தர்கள் செல்லும் வரிசையை ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகளுக்கு, உதவி ஆணையர், செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள், என 24 அதிகாரிகளை நியமித்து, இணை கமிஷனர் குமரதுரை உத்தரவிட்டுள்ளார். இன்றைக்கே சம்பந்தப்பட்ட அறநிலையத் துறை அதிகாரிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை கவனிக்க வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மார்கழியின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 
temple news
உடுமலை: சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில் திருவிழா வரும் 16ம் தேதி சிறப்பு அலங்கார பூஜையுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar