Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ... சபரிமலையில் ஸ்ரீஐயப்பனை தரிசனம் செய்த ராஜநாகம்; பக்தர்கள் பரவசம் சபரிமலையில் ஸ்ரீஐயப்பனை தரிசனம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் ஆனிவார ஆஸ்தானம்; மலர் அலங்காரத்தில் மலையப்ப ஸ்வாமி
எழுத்தின் அளவு:
திருப்பதியில் ஆனிவார ஆஸ்தானம்; மலர் அலங்காரத்தில் மலையப்ப ஸ்வாமி

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2025
02:07

திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி கோயிலில் சாஸ்திரப்படி சாலகட்ல ஆனிவார ஆஸ்தானம் நடைபெற்றது. திருமலை ஸ்ரீ ஸ்ரீ பெரியஜீயர் சுவாமி,  ஸ்ரீ ஸ்ரீ சின்னஜீயர் சுவாமி, தேவஸ்தான தலைவர்  பி.ஆர். நாயுடு, தலைமை நிர்வாக அதிகாரி ஜே. சியாமளா ராவ் ஆகியோர் பங்கேற்றனர்.


ஆனி மாதத்தில் இறுதி நாளாவதால் ஆனிவார ஆஸ்தானம் என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதத்தில் இந்த ஆஸ்தானம் நடைபெறும். முற்காலத்தில் தேவஸ்தான கணக்கு வழக்குகள் இந்த நாளில் தான் எழுதத் தொடங்குவர், புராண காலத்திலிருந்து இந்த நாள் தான் கணக்கு தொடங்கும் நாளாக இருந்து வந்தது. ஆனால் அது காலப்போக்கில் ஏப்ரல் மாதத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால் இந்த உத்ஸவம் மட்டும் அதை நினைவுபடுத்தும் வகையில் இந்நாளிலேயே நடைபெறுகிறது. அதன்படி இன்று ஸ்ரீவாரி கோயில் சாஸ்திரப்படி ஆனிவார ஆஸ்தானம் நடைபெற்றது.


முன்னதாக, காலை தங்க வாயில் முன் ஸர்வ பூபால வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் திருமலையப்ப ஸ்வாமியை எழுந்தருளினார்.  மற்றொரு பீடம் மேல் விஷ்வக்ஸேனரை எழுந்தருளச் செய்து, சுவாமிகளுக்கு ஸ்ரீரங்கம் பட்டுப்புடவை, வஸ்த்திரம், அட்சதை சமர்பித்து நைவேத்தியம் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் கூடிய ஸ்ரீ மலையப்ப ஸ்வாமி நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட மலர் பல்லக்கில் உலா வந்து நான்கு மாட வீதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் ஸ்ரீவாரி கோயிலின் தலைமை அர்ச்சகர்கள் ஸ்ரீவாரியின் பாத அங்கியுடன் கூடிய "பரிவட்டம்" ஒன்றைத் தலையில் கட்டிக்கொண்டு, சுவாமியிடமிருந்து அரிசி தட்சிணையை ஏற்றுக்கொண்டு, நித்யஐஷ்வர்யோபவ என்று கூறி ஆசீர்வதித்தனர். பின் செயலாட்சி தலைவருக்கு தேவஸ்தான கொத்துசாவியுடன் கூடிய ஆரத்தியும், சடாரி சேவையும் நடைபெற்றது. விழாவில் தேவஸ்தாவ வாரிய உறுப்பினர்கள் பனபக லக்ஷ்மி, பானு பிரகாஷ் ரெட்டி, நரேஷ் குமார், சாந்தா ராம், சதாசிவ் ராவ், ஜங்கா கிருஷ்ணமூர்த்தி, ஜானகிதேவி, மகேந்திர ரெட்டி, கூடுதல் இஓ சிஎச் வெங்கையா சவுத்ரி, கோயில் துணை இஓ லோகநாதம் மற்றும் அலுவலர்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மார்கழியின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது ... மேலும்
 
temple news
பழநி; பழநி மகிஷாசுரமர்த்தினி கோவிலில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு யாகம் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar