Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் கற்பூர ஆழி பூஜை! சவேரியார் சர்ச்சில் கிறிஸ்துமஸ் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக நன்மை வேண்டி கூட்டுப் பிரார்த்தனை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2012
10:12

ஆண்டிபட்டி: உலக நன்மை வேண்டியும், ஆன்மிக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் திருக்கூட்ட சுவாமிகளின் கூட்டு பிரார்த்தனை, ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் நடந்தது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், நவராத்திரி விழாவை  முடித்து வந்துள்ள, திருக்கூட்ட சுவாமிகள் மேற்கு தொடர்ச்சி மலையை சுற்றி உள்ள பல்வேறு ஊர்களுக்கு 108 நாட்கள் யாத்திரை செல்வார். உலக நன்மை வேண்டியும், ஆன்மிக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கூட்டு பிரார்த்தனை மேற்கொண்டு வருகிறார். மாவூற்று, மகாராஜபுரம், மாத்தூர், சுந்தரபாண்டியம், அகத்தாபட்டி, புதுப்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், சத்திரப்பட்டி, சம்சிகாபுரம், புனல்வேலி, டி.சுப்புலாபுரம் சென்ற சுவாமிகள் சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் மூன்று நாட்கள் தங்கினார். உலக நன்மைக்கும், நோயில்லா வாழ்வுக்கும், லட்சுமி பூஜை, மகேஸ்வர பூஜை, சுமங்கலி பூஜைகள் நடத்தினார். கடந்த 198 ஆண்டுகளாக இவ்வாறான திருக்கூட்ட சுவாமிகளின் பிரார்த்தனை நடப்பதாகவும், இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 108 நாட்கள் யாத்திரை முடித்து செல்லும் சுவாமிகள் மீண்டும் சுந்தரமகாலிங்கத்தில் உள்ள காளிமுத்து சுவாமிகள் ஆசிரமத்தில் நிறைவு செய்கிறார்.
சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் தங்கி இருந்த சுவாமிகளுக்கு கோயில் நிர்வாகம் சார்பிலும், ஊர் பொதுமக்களும் வரவேற்று உபசரிப்பு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கடலூர் ; புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு கடலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar