Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ... உலக நன்மை வேண்டி கூட்டுப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் கற்பூர ஆழி பூஜை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 டிச
2012
10:12

சபரிமலை: சபரிமலையில் தினமும், ஏழு லட்சம் அப்பம் தயாரிப்பதற்கான, இயந்திரம் விரைவில் நிறுவப்பட உள்ளது. சபரிமலையில் நடப்பு சீசனுக்காக, இருப்பு வைக்கப்பட்டிருந்த அப்பங்களில், பூஞ்சை படிந்ததால் அவை அழிக்கப்பட்டன. இதனால், அப்பம் வினியோகத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. தற்போது, மும்பை நிறுவனம் ஒன்று, தினமும் ஏழு லட்சம் அப்பம் தயாரிக்கும் இயந்திரத்தை, சபரிமலைக்கு வழங்க உள்ளதாகவும், அதை பெங்களூரு பக்தர் ஒருவர் நன்கொடையாக வழங்க உள்ளதாகவும், தேவஸ்தான உறுப்பினர் சுபாஷ் கூறினார். சபரிமலையில் கடைகள் வாடகை மற்றும் குத்தகை முறையில் ஏற்படும் முறைகேடுகளை தவிர்க்க, இ-டெண்டர் முறை விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

கற்பூரஆழி: மண்டல பூஜைக்கு முன்னோடியாக தேவசம்போர்டு ஊழியர்களின் கற்பூர ஆழி பூஜை, நாளை சன்னிதானத்தில் நடக்கிறது. அன்று மாலை தீபாராதனைக்கு பின், தந்திரி கண்டரரு ராஜீவரரு கற்பூரதீபம் ஏற்ற, கற்பூரம் கொளுந்து விட்டு எரியும் பாத்திரத்துடன், மேளதாளம் முழங்க, கற்பூர ஆழி பவனி புறப்படும். சன்னிதானத்தில் ஸ்ரீகோவிலை வலம் வந்த பின், மாளிகைபுறம் கோவில் வழியாக 18ம் படியருகே கற்பூர ஆழி பவனி நிறைவு பெறும்.

மூன்று கோடி வருவாய்: சபரிமலைக்கு பஸ் மற்றும் வேன்களில் வரும் பக்தர்கள், பம்பையில் இறங்கிய பின், அவர்களின் வாகனங்கள் நிலக்கல்லுக்கு சென்று விடும். தரிசனம் முடிந்து வரும் பக்தர்கள், கேரள அரசு பஸ் மூலம் நிலக்கல் சென்று, அங்கிருந்து அவர்களது வாகனத்தில் ஊர் திரும்ப வேண்டும். நிலக்கல்-பம்பை வழியில் மட்டும், கேரள அரசு போக்குவரத்து கழகத்துக்கு மூன்று கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்பு, சேவை, தியாகம், மனிதநேயம்... இந்தச் சொற்கள் அனைத்தும் ஒன்றாகக் கலந்த உருவமே பகவான் ஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
விருத்தாசலம்; மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயிலில் சஷ்டி மற்றும் கிருத்திகை ஒட்டி சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் பவித்ரோற்சவ வைபவத்தையொட்டி மலையப்ப சாமி, ஸ்ரீதேவி, ... மேலும்
 
temple news
கோவை; கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் சின்னம்மாள் வீதியில் அமைந்துள்ள ஞான ஈஸ்வரர் கோவிலில் ஆவணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar