பதிவு செய்த நாள்
21
டிச
2012
11:12
சேலம்: சேலம் ஸ்ரீ பக்தி சாரர் பக்த சபா சார்பில், திருப்பதியில் நடக்கும் வைகுண்ட ஏகாதசிக்கு, நான்கு டன் மலர்கள் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமலை திருப்பதியில், வரும், 23ம் தேதி, ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இந்த விழாவுக்கு, சேலத்தில் இருந்து, வரும், 21ம் தேதி, ஸ்ரீ பக்தி சாரர் பக்த சபா சார்பில், டி.ஆர்.எஸ்., திருமணமண்டபத்தில் இருந்து, நான்கு டன் மலர்கள் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களும், பொதுமக்களும், திருப்பதி ஏழுமலையானுக்கு மலர்களை வழங்கிடவும், மலர்களை தொடுத்திட வருகை புரியும்படி, ஸ்ரீ பக்தி சாரர் பக்த சபா அமைப்பாளர் சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.