Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news 300 ஆண்டுகள் பழமையான சதிக்கல்; பல்லடம் ... ஆடி சோமவாரம்; கம்பீர விநாயகர் கோவிலில் புவனேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் ஆடி சோமவாரம்; கம்பீர விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பர்வதம் மண்டகப்படியில் சுவாமி; ராமேஸ்வரம் கோவில் இன்று முழுவதும் நடை அடைப்பு
எழுத்தின் அளவு:
பர்வதம் மண்டகப்படியில் சுவாமி; ராமேஸ்வரம் கோவில் இன்று முழுவதும் நடை அடைப்பு

பதிவு செய்த நாள்

04 ஆக
2025
12:08

ராமேஸ்வரம்; பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியையொட்டி இன்று முழுவதும் ராமேஸ்வரம் கோவில் நடை அடைக்கப்பட்டது.


ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த மாதம் 19-ந்தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.  திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 30-ந்தேதி அன்று சுவாமி-அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. ஆடி திருக்கல்யாண திருவிழாவின் 16-வது நாளான நேற்று இரவு 7 மணிக்கு கோவிலின் திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து சுவாமி அம்பாள் திருஊஞ்சல் நிகழ்ச்சி நடைபெற்று சிறப்பு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன.  இந்த நிலையில் திருவிழாவின் கடைசி நாளான நாளான இன்று காலை 6 மணிக்கு சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோர் தங்க கேடயத்தில் கெந்தமாதன பருவத மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.  அதனைதொடர்ந்து  இன்று காலை 7 மணிக்கு கோவில் நடையானது சாத்தப்பட்டு இன்று முழுவதும் பக்தர்கள் கோவிலில் உள்ள தீர்த்தக் கிணறுகளில் புனித நீராடவும், தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்பட வில்லை. முன்னதாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் கடைசி நேரத்தில் நடை சாத்தப்பட இருப்பது அறிந்து திருக்கோயில் வளாகத்தில் குடும்பத்துடன் ஓடிச்சென்று சாமியை தரிசனம் செய்தனர். சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்கள் அனைவரும் வெளியேறிய பின் நடை முழுமையாக சாத்தப்பட்டது.  பின்னர் சாமி தரிசனம் செய்ய வந்தவர்கள் திருக்கோயிலின் கிழக்கு ராஜ கோபுரம் முன்  நின்றவாறு சாமி கும்பிட்டு  விட்டு சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar