Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ... பழநி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை துவங்கியது பழநி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் செருத்துணை நாயனார் குரு பூஜை
எழுத்தின் அளவு:
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் செருத்துணை நாயனார் குரு பூஜை

பதிவு செய்த நாள்

21 ஆக
2025
11:08

சென்னை; திருவொற்றியூர் ஸ்ரீஆதிபுரீஸ்வரர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலில் ஆதிபுரீஸ்வரர் சன்னதி அருகில் அருள்பாலிக்கும்  63 நாயன்மார்களில் ஒருவரான செருத்துணை நாயனார் குருபூஜை இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. 


செருத்துணை நாயனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். இவர் இரண்டாம் புலிகேசியை வெற்றி கொண்ட சேனாதிபதியாக நரசிம்ம பல்லவரிடம் பணியாற்றினார். காவிரி வளநாட்டில் திருச்செங்கோட்டங்குடியில் மாமாத்திரர் குலத்தில் தோன்றியவர் பரஞ்சோதியார். இவர் ஆயுள் வேதக்கலையிலும் (மருத்துவம்), வடநூற்கலையிலும், படைக்கலத் தொழிலிலும் நிரம்பிய பயிற்சியுடையவர்; யானையேற்றம், குதிரையேற்றம், ஆகியவற்றிலும் வல்லவர். உள்ளம் நிறைந்த கலைத்துறைகள் ஒழிவின்றிப் பயின்றதனால், சிவன்கழலைச் சிந்தித்துப் போற்றுதலே மெய்ந்நெறியாவதெனத் தெளிந்தவர். ஈசனடியார்க்குப் பணிசெய்தலை இயல்பாகக் கொண்டவர். இவரின் குருபூஜை விழாவை முன்னிட்டு, முன்னதாக சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து பஞ்சாமிர்தம், தேன், பால், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்கள் இளநீர், பன்னீர் ஆகியவளால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, பின்னர் தூப தீப ஆராதனை காட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவராத்திரி விரதம் இருந்து ஈசனை வழிபட குடும்பத்தில் நன்மை பெருகும். சிவம் என்ற சொல்லுக்கு சுகம் என்று ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா 8ம் நாளான இன்று காலை வெள்ளி ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழாவில், விநாயகர் சிம்ம வாகனத்தில் வீதி ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே குத்துக்கல்வலசையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லுரில் புகழ் பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar