வில்லியனூர் பெருமாள் கோவிலில் 24ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22டிச 2012 11:12
புதுச்சேரி: வில்லியனூர் பெருமாள் கோவிலில், வரும் 24ம் தேதியன்று காலை, சொர்க்கவாசல் திறப்பு உற்சவம் நடக்கிறது. வில்லியனூரில் உள்ள பெருந்தேவித் தாயார் சமேத தென்கலை வரதராஜப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பகல் பத்து உற்சவம், கடந்த 14ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. பத்து நாள், பகல் பத்து உற்சவம் நாளை முடிந்து, இராப்பத்து உற்சவம் துவங்க உள்ளது. நாளை (23ம் தேதி) இரவு 9 மணிக்கு, பெருமாளுக்கு தசமி திருமஞ்சனம் நடக்கிறது. 24ம் தேதி காலை 5 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. கூடப்பாக்கம்: வில்லியனூர் அடுத்த கூடப்பாக்கத்தில் உள்ள, தென்கலை வரதராஜப் பெருமாள் கோவிலிலும் வைகுண்ட ஏகாதசி உற்சவத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி நாளை மாலை 6 மணிக்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கிறது. 24ம் தேதி காலை 5.20 மணிக்கு சொர்க்க வாசல் திறந்து, சுவாமி வீதியுலா நடக்கிறது.