யானை வாகனத்தில் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஆக 2025 10:08
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழாவில், 5 ம் நாள் நிகழ்வாக யானை வாகனத்தில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் வெயிலுகந்த வந்த விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் பத்து நாட்கள் நடக்கின்றன. சதுர்த்தி விழாவில் தினமும் மாலையில் பல்வேறு வாகனங்களில் விநாயகர் ஊர்வலம் நடக்கிறது. வெள்ளி மூஷிக வாகனம், கேடகம், சிம்மம், மயில் உள்ளிட்ட வானங்களில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்ற நிலையில், 5ம் நாள் மண்டகப்படி நிகழ்வாக, யானை வாகனத்தில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தீப ஆராதனை நடைபெற்றன. தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக யானை வாகனத்தில் வலம் வந்த விநாயகருக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு பொரிகடலை, சுண்டல் வழங்கப்பட்டது.