செஞ்சி; மேல்மலையனுார் லட்சுமி நாராயண அஷ்டலட்சுமி மற்றும் ஆஞ்சநேயர் கோவிலில் ஆதி பிரம்மனுக்கு ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. அதனையொட்டி, நேற்று காலை 9:00 மணிக்கு ஆஞ்சநேயர் மற்றும் ஆதி பிரம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு ஆதிபிரம்மனுக்கு மகா தீபாரதனையும், ஊஞ்சல் தாலாட்டு உற்சவமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.