Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாமனரை உத்தமன், மாயன் என்று சொல்வது ... அங்காளபரமேஸ்வரி அம்மன், வாணி கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேகம் அங்காளபரமேஸ்வரி அம்மன், வாணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓணம் பண்டிகை; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் நேந்திரன் பழம் சமர்ப்பணம்
எழுத்தின் அளவு:
ஓணம் பண்டிகை; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் நேந்திரன் பழம் சமர்ப்பணம்

பதிவு செய்த நாள்

04 செப்
2025
03:09

பாலக்காடு; ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் மூலவருக்கு, "காழ்ச்சகுலை சமர்ப்பணம் என்ற நேந்திரன் பழம் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடந்தது.


கேரள மாநிலத்தில், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு உத்திராடம் நாளான இன்று காலை சிறப்பு தாழ்ச்சீவேலி என்ற செண்டை மேளம் முழங்க, யானை மீது உற்சவர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கோவில் தங்கக் கொடிமரம் கீழ், பக்தர்கள் மூலவருக்கு காணிக்கையாக, நேந்திரன் பழம் சமர்ப்பிக்கும் "காழ்ச்சகுலை சமர்ப்பணம் என்ற நிகழ்ச்சி நடந்தது. கோவில் மேல்சாந்தி பிரஹ்மஸ்ரீ கவபிரா மாறத்து மனை அச்சுதன் நம்பூதிரி, மூலவருக்கு முதல் பழ கொத்து காணிக்கையாக சமர்ப்பித்தார். இதையடுத்து, தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் விஜயன், குழு உறுப்பினர்களான பிரஹ்மஸ்ரீ மல்லிச்சேரி பரமேஸ்வரன் நம்பூதிரிப்பாடு, மனோஜ், விஸ்வநாதன், கோவில் நிர்வாகி பிரமோத் ஆகியோர் பழ கொத்து காணிக்கையாக சமர்ப்பித்தனர். அதன் பின், பக்தர்கள் மூலவருக்கு பழ கொத்து காணிக்கையாக சமர்ப்பித்து வழிபட்டனர். இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்தப் பழ கொத்து, திருவோணம் நாளான நாளை நடக்கும் "ஒண சத்யா என்ற சிறப்பு அன்னதானத்தில் பழம் பாயாசம் தயாரிக்க பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பத்தாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளதாக தேவஸ்தானம் நிர்வாக குழுவினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண விழா இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண விழாவில் ஏராளமான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை தருமபுரத்தில் 16ஆம் நூற்றாண்டின் குரு ஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட சைவத் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை;  திருவண்ணாமலை: ஜவ்வாதுமலை, கோவிலுார் மலை கிராமத்தில், மூன்றாம் ராஜராஜசோழன் காலத்தில் ... மேலும்
 
temple news
மயிலம்: மயிலம் அருகே ஏரிக்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவோடு இரவாக வைக்கப்பட்ட சுவாமி சிலையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar