திருக்கண்டேஸ்வரம் கால பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15செப் 2025 03:09
நெல்லிக்குப்பம்; திருக்கண்டேஸ்வரம் கால பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நடந்தது.
நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் ஆனந்த கால பைரவருக்கு தனி சன்னதி உள்ளது. தேய்பிறை அஷ்டமியில் கால பைரவரை வணங்கினால் கஷ்டங்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தேய்பிறை அஷ்டமியையொட்டி 1,008 சங்குகளில் புனிதநீர் நிரப்பி யாகம் செய்து காலபைரவருக்கு சங்காபிஷேகம், தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் அருள்பாலித்தார். உற்சவர் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார். பூஜைகளை சேனாபதி குருக்கள் செய்தார். இதேப் போன்று, நெல்லிக்குப்பம் கைலாசநாதர், பூலோகநாதர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.