திருக்காலிமேடு பெரியபாளையத்தம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15செப் 2025 04:09
காஞ்சிபுரம்; திருக்காலிமேடு பெரியபாளையத்தம்மன் கோவிலில் 35வது ஆண்டு தீமிதி திருவிழா விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் திருக்காலிமேடு பெரியபாளையத்தம்மன் கோவிலில் 35வது ஆண்டு கூழ்வார்த்தல் விழா மற்றும் தீமிதி திருவிழா, கடந்த 8ம் தேதி காப்பு கட்டும் நிகழ்வுடன் துவங்கியது. இதில், நேற்று காலை 6:00 மணிக்கு அம்மன் பூங்கரகம் வீதியுலாவும், பிற்பகல் 12:00 மணிக்கு கூழ்வார்த்தலும், மாலை 4:00 மணிக்கு கோவில் வளாகத்தில் பொங்கல் வைக்கும் நிகழ்வும் நடந்தது. இரவு 8:30 மணிக்கு தீமிதி திருவிழா துவங்கியது. இதில், காப்பு கட்டி விரதம் மேற்கொண்ட பக்தர்கள் தீமிதித்தனர். இரவு 11:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன் சின்ன வேப்பங்குளக்கரை, சத்யநாதசுவாமி பிரமராம்பிகை கோவில் வழியாக வீதியுலா வந்தார்.