Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிறிஸ்துமஸ்விழா: நாடு முழுவதும் ... ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 டிச
2012
11:12

அழகர்கோவில்: மதுரை அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சுந்தரராஜ பெருமாள் காலை 5.25 மணிக்கு சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினார். பின், கோயிலில் உள்ள சயன மண்டபத்தில் மாலை வரை எழுந்தருளிய பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் காலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், இணை கமிஷனர் ஜெயராமன், கண்காணிப்பாளர்கள் கனகரத்தினம், முருகேசன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தல்லாகுளம் நவநீதகிருஷ்ணன்: சக்கரத்தாழ்வார் கோயில் சொர்க்கவாசல் திறப்பில், தக்கார் அங்கயற்கண்ணி மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.

சோழவந்தான்: ஜெனகைநாராயணப்பெருமாள் கோயிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. தக்கார் மாலதி, நிர்வாக அதிகாரி அருள்செல்வன், ஆலய ஊழியர் பூபதி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயில், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு, நிர்வாக அதிகாரி சக்கரையம்மாள், ஆலய ஊழியர்
வெங்கடேஷன் ஏற்பாடு செய்திருந்தனர். தென்கரை சத்யபாமா, ருக்மணி சமேத நவநீதகிருஷ்ணன் கோயிலில், மேலக்கால் வெங்கடேஷ பெருமாள் கோயிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம்: இக்கோயில் மூலஸ்தானத்தில் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். மூலவர்கள் சன்னதியில் பெருமாள் எழுந்தருளி இருப்பதால், ஆண்டுதோறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. நேற்றும் நடந்தது. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில், இந்தாண்டு முதன்முறையாக சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

வைகுண்ட ஏகாதசியையொட்டி மதுரை கூடழலகர் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar