Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஷீரடி சாய்பாபா கோவிலில் சொற்பொழிவு தம்பிராட்டி அம்மன் கோவிலில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடாரண்யேஸ்வரர் கோவிலில் 28ம் தேதி ஆருத்ரா தரிசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 டிச
2012
11:12

திருவள்ளூர்: திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோ விலில் ஆருத்ரா தரிசனம் வரும், 28ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற உள்ளது.திருவள்ளூர் அடுத்த, திருவாலங்காடுவில் உள்ளது வண்டார்குழலி அம்மை சமேத வடாரண்யேஸ்வரர் கோவில். சிவபெருமான் நடனம் ஆடிய திருச்சபைகளில் முதல் சபையான ரத்தின சபை என, இத்தலம் அழைக்கப்படுகிறது. காரைக்கால் அம்மையார் தலையால் நடந்து வந்து, சிவபெருமானின் நடனத்தை கண்டு ரசித்தஸ்தலம்.இரவு முழுவதும் அபிஷேகம் இங்கு ஆண்டுதோறும், மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜருக்கு நடைபெறும் அபிஷேகம் "ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமான் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தார் என்பதால், அந்த நட்சத்திரத்தில் இங்கு அபிஷேகம் நடைபெறுகிறது.இந்தாண்டு ஆருத்ரா தரிசனம், வரும், டிச., 28ம் தேதி, வெள்ளிக்கிழமை நடக்கிறது. அன்றைய தினம், இரவு, 9:00 மணியளவில், ரத்தின சபாபதிப் பெருமான், ஸ்தல விருட்சத்தின் கீழ், புதிதாக நிர்மாணித்துள்ள ஆருத்ரா அபிஷேக மண்டபத்திற்கு எழுந்தருள்வார். இரவு, 9:30 மணிக்கு அபிஷேகம் ஆரம்பித்து, விடியற்காலை 4:00 மணி வரை நடைபெறும். ஏற்பாடுஅதன் பின்னர், அலங்காரம் செய்து, மறுநாள், 29ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு தீபாராதனை நடைபெற்று, ஆலமர பிரகாரம் வலம் வந்து கோபுர தரிசனம் நடைபெறும். பகல் 1:00 மணிக்கு அனுக்கிரக தரிசனமும், மறுநாள், 30ம் தேதி காலை, 8:45 மணிக்கு சாந்தி அபிஷேகமும் நடைபெறும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவர் என்பதால், அதற்கான ஏற்பாடுகளை, திருத்தணி முருகன் கோவில் இணை ஆணையர் புகழேந்தி மற்றும் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar