பதிவு செய்த நாள்
25
டிச
2012
11:12
திருத்தணி: மார்கழி மாதத்தை ஒட்டி, ஷீரடி சாய்பாபா கோவிலில், ஏழு நாள் பாகவத சப்ஹாசனம் (ஆன்மிக சொற்பொழிவு) நேற்று துவங்கியது.திருத்தணி அடுத்த,கே. ஜி.கண்டிகை சாய்நகரில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில், மார்கழி மாதத்தை ஒட்டி, ஏழு நாள் ஆன்மிக சொற்பொழிவு நேற்று துவங்கியது. நேற்று, பிரகலாதன் வாழ்க்கை குறித்து, மருத்துவர் ஆர்.பி.என்., சொற்பொழிவு ஆற்றினார்.தொடர்ந்து, ருக்மணி கல்யாணம், சீனிவாச கல்யாணம், கிருஷ்ணர் தூது, தர்மர் பட்டாபிஷேகம் ஆகிய தலைப்புகளில், 30ம் தேதி வரை சொற்பொழிவு நடைபெறும்.