நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் புரட்டாசி சனி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27செப் 2025 03:09
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் புரட்டாசி 2ம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது. நெல்லிக்குப்பம் பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் மூலவர் சிலைகள் அத்திமரத்தாலானது சிறப்பாகும். இதனால், மூலவருக்கு அபிஷேகத்துக்கு பதிலாக தைலகாப்பு நடப்பது வழக்கம். இன்று புரட்டாசி 2வது சனிக்கிழமையையொட்டி மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மூலவர் வேணுகோபால சுவாமி, திருவல்லிகேணி பார்த்தசாரதி பெருமாள் அலங்காரத்தில் அருள்பாலித்தார். பாமா ருக்குமணி சமேதராய் உற்சவர் வேணுகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார். பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.