காளாத்தீஸ்வரர் கோயிலில் சுகாதார வசதியின்றி ஐயப்ப பக்தர்கள் அவதி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28டிச 2012 11:12
உத்தமபாளையம் : சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், அதிகளவில் வந்து தங்கிச் செல்லும் தேனி மாவட்டம்,காளாத்தீஸ்வரர் கோயில் பகுதியில், கழிப்பிட வசதியில்லாததால் பெரும் சிரமப்படுகின்றனர். உத்தமபாளையத்தில், தென் காளகஸ்த்தி என்றழைக்கப்படும் பழமையான காளாத்தீஸ்வரர் கோயில் உள்ளது. ராகு-கேது சர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலமாகவும் உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித் வருகிறது. தற்போது சபரிமலை சீசன் நடந்து வருகிறது. தேனி மாவட்டம் வழியாக ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், உத்தமபாளையத்தில், நெடுஞ்சாலைக்கு மிக அருகிலேயே அமைந்துள்ள காளாத்தீஸ்வரர் கோயிலுக்கும் சென்று தரிசனம் செய்து செல்கின்றனர். வாகனங்களில் செல்லும் பக்தர்கள் மட்டுமின்றி, பாதையாத்திரையாக செல்லும் பக்தர்களும் அதிகளவில் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். பலர் கோயிலிலேயே தங்கியும் செல்கின்றனர். இக்கோயில் பகுதியில், கழிப்பிட வசதிகள் எதுவும் இல்லை. இதனால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். அருகிலேயே முல்லைப் பெரியாறு உள்ளதால், ஆற்றுப் பகுதி மாசுபடும் நிலை ஏற்பட்டுள்ளது.