Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேட்டுப்பாளையம் மைதானம் மாரியம்மன் ... மன்னார்குடி வடுவூர் கோதண்ட ராமர் கோவிலில் கருட சேவை மன்னார்குடி வடுவூர் கோதண்ட ராமர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் விழா; ஓம் சக்தி பராசக்தி என பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் விழா; ஓம் சக்தி பராசக்தி என பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

31 மார்
2026
01:03

பெருமாநல்லூர்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் குண்டம் தேர் திருவிழா கடந்த 25 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று 31 ம் தேதி அதிகாலை வீர மக்கள் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி, முன்னதாக குதிரையுடன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள படைக்கல சாவடிக்கு சென்று அங்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து பரிவார மூர்த்திகளான கன்னிமார் - கருப்பராயன், முனீஸ்வரனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. தொடர்ந்து, கொண்டத்து காளியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைப்பெற்றது. அதனை அடுத்து தலைமை பூசாரிகள் மனோகர், விநாயக மூர்த்தி, ஆகியோர் கை குண்டம் வாரி இறைத்து குண்டம் இறங்கி குண்டம் இறங்குவதை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, வீரமக்கள் மஞ்சள் உடை உடுத்தி மஞ்சள் நீர் கிணற்றில் குளித்து, பக்தி பரவசத்துடன் ஓம் சக்தி பராசக்தி என்ற கோஷத்துடன் குண்டம் இறங்கினர். வீர மக்கள் வரிசையாக குண்டம் இறங்க தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. காலை 5:40 மணிக்கு தொடங்கிய குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி 11:00 மணி வரை நடைப்பெற்றது. தொடர்ந்து, குண்டம் மூடப்பட்டது. மூடப்பட்ட குண்டத்தின் மீது பக்தர்கள் நேர்த்திகடனாக உப்பு, மிளகு, கருப்பு போட்டு வழிபட்டனர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது. கோவிலுக்கு திருப்பூர், அவிநாசி, சேவூர், குன்னத்தூர், கோபி, நம்பியூர், உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து லட்ச கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். ஒரு ஏடி.எஸ்.பி தலைமையில் 300 க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் வந்து செல்ல சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. மாலை 3:30 மணிக்கு தோரோட்டம் நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகனுக்குரிய விரதங்களில் பங்குனி உத்திரமும் ஒன்று. இந்நாள் சாஸ்தா, சிவன், விஷ்ணு ஆகிய ... மேலும்
 
temple news
ஈரோடு; சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன்கோவிலில் குண்டம் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. விரதம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று தங்கத் தேரோட்டம் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை ; மேட்டுப்பாளையத்தில் பழமை வாய்ந்த மைதானம் மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar