Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோயில் வின்ச் கட்டண மாற்ற ... ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் யாகசாலை பூஜைகள் துவக்கம் ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை செல்ல சுருளி அருவியில் மாலை அணிந்து விரதம் துவங்கிய பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
சபரிமலை செல்ல சுருளி அருவியில் மாலை அணிந்து விரதம் துவங்கிய பக்தர்கள்!

பதிவு செய்த நாள்

01 நவ
2025
04:11

கம்பம்; சபரிமலை ஐயப்பன் கோயில் மகர விளக்கு மண்டல பூஜையில் பங்கேற்க பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க துவங்கியுள்ளனர்.


சபரிமலை ஐயப்பன் கோயில் தென் மாநிலங்களில் பிரசித்தி பெற்ற கோயில்களில் முதலிடம் பெறுகிறது. ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறந்து தரிசனத்திற்கு அனுமதி கிடைத்த போதும், ஆண்டிற்கு ஒரு முறை நடைபெறும் மகரவிளக்கு மண்டல பூஜை நிகழ்ச்சிகளே பிரதானமாகும். கார்த்திகை முதல் நாள் துளசி மாலை அணிந்து 48 நாட்கள் விரதமிருந்து ஐயப்பனை தரிசிக்க செல்வது வழக்கம். ஆனால் இப்போது கூட்டத்தை கருத்தில் கொண்டு, பெரும்பாலான பக்தர்கள் முன்கூட்டியே மாலை அணிந்து விரதத்தை துவக்கி கோயிலிற்கு செல்ல துவங்கி உள்ளனர். கம்பம் சுருளி வேலப்பர் சுப்ரமணியசாமி ஐயப்பா சேவா சங்கத்தினர் தங்களது 48 வது ஆண்டு சபரி யாத்திரைக்கான நிகழ்ச்சியை ஆரம்பித்தனர்.


அதிகாலையில் சுருளி அருவியில் உள்ள கைலாசநாதர் குகை பகுதியில் ஏராளமான பக்தர்கள் நீராடி, குருநாதர் நாராயணன் பக்தர்களுக்கு துளசி மாலை அணிவித்து விரதத்தை துவக்கி வைத்தார்.. முன்னதாக அங்குள்ள பாதவிநாயகர் கோயிலில் பூஜை செய்தும், . தொடர்ந்து அங்குள்ள ஐயப்பன் கோயிலில் படி பூஜை செய்தும் வழிபட்டனர். இந்த சேவா சங்கத்தின் குருநாதர், நாராயணன் கூறுகையில், " வழக்கமாக கார்த்திகை முதல் தேதி மாலை அணிந்து விரதத்தை துவக்குவோம். கடந்தாண்டு முதல் முன்கூட்டியே செல்ல வேண்டும் என்பதற்காக முன் கூட்டியே மாலை அணிந்து விரதத்தை துவக்கியுள்ளோம். நேற்று காலை சுருளி அருவியில் குளித்து மாலை அணிந்து விரதத்தை துவக்கி உள்ளோம். எங்கள் குழுவில் 100 பேர்கள் வரை உள்ளனர். தற்போக 60 பேர்கள் வரை மாலை அணிந்து விரதத்தை துவங்கி உள்ளோம் " என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசையை  முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 143வது ஆண்டு மயான கொள்ளை உத்சவம் நேற்று ... மேலும்
 
temple news
ஆந்திரா; சுருட்டப்பள்ளி கார்னிசுவரர் கோவிலில் முருகன் சிலை கண் திறந்த கூறப்படும் வீடியோ இணையத்தில் ... மேலும்
 
temple news
இடையகோட்டை; இடையகோட்டை அருகே வலையபட்டி ஸ்ரீமகாலட்சுமி அம்மன் கோயிலில் மகாசிவராத்திரி உற்சவத்தை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: வெள்ளியங்கிரி மலையில், கடந்த 16 நாட்களில், 55 ஆயிரம் பக்தர்கள் மலையேறி, சுவாமி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar