Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி லட்சுமி நாராயண பெருமாள் ... சக்திவராஹி அம்மன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை   சக்திவராஹி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கம்பம் காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக முகூர்த்தக்கால் நடப்பட்டது
எழுத்தின் அளவு:
கம்பம் காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக முகூர்த்தக்கால் நடப்பட்டது

பதிவு செய்த நாள்

10 நவ
2025
05:11

கம்பம்; கம்பம் காசி விஸ்வநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதை ஒட்டி இன்று காலை முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்ச்சி நடத்தது.


கம்பம் கம்ப ராயப் பெருமாள் மற்றும் காசி விஸ்வநாதர் கோயிலில் ஒரே வளாகத்தில் சிவனும், பெருமாளும் தனித் தனி சன்னதிகளில் எழுந்தருளியிருப்பது சிறப்பாகும். வலது கை சின்முத்திரையுடனும், இடது கையில் கமண்டலத்துடன் தட்சிணாமூர்த்தியும், ஆறு முகங்கள், 12 கைகளுடன் முருகனும், தெற்கு திசை நோக்கி பைரவரும் உள்ளனர். கோயில்களில் மேற்கு, தெற்கு திசை நோக்கி இருக்கும் பைரவர்கள் அதிக சக்தி கொண்டவர்கள் என புராணங்கள் கூறுகிறது. இவர்களுக்கு பூஜைகள் செய்யாவிட்டாலும், ஆற்றலுடன் இருப்பார்கள் என்கின்றனர். இங்குள்ள காசி விஸ்வநாதர் கோயில் 22 ஆண்டுகளுக்கு பின் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் வரும் டிச. முதல் தேதி நடைபெறுகிறது. அதற்கான முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்ச்சி இன்று நடந்தது. முன்னதாக சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. முகூர்த்த காலுக்கு பால், நவதானியங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் போட்டு அபிஷேகம் செய்தனர். காலை 6:50 மணியளவில் முகூர்த்த கால் ஊன்றப்பட்டது. கூடியிருந்த பக்தர்கள் ‘ஹர ஹர மகாதேவா’ கோஷம் எழுப்பினார்கள். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ, ராமகிருஷ்ணன் , நகராட்சி தலைவர் வனிதா, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஜெயபாண்டியன், முருகேசன், விவசாய சங்க தலைவர் ஓ.ஆர். நாராயணன், நாகமணியம்மாள் பள்ளி தாளாளர் காந்த வாசன், முன்னாள் ரத உற்சவ கமிட்டி திருமலை சங்கர், வர்த்தக சங்க தலைவர் முருகன், முன்னாள் கவுன்சிலர்கள் சேகர், மாரியப்பன் உள்ளிட்ட அனைத்து சமுதாய பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் கம்பராமாயணம் தொடர் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, 16 கால் மண்டபம் அருகில் கார், வேன், பேருந்து உள்ளிட்ட ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், ஆண்டு தோறும், வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக ... மேலும்
 
temple news
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை நடந்தது.கோபால்பட்டி அருகே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar