Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஜம்புகேஸ்வரர் கோவிலில் ... சோமநாத் லிங்க கண்காட்சி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆருத்ரா தரிசனம் கோலாகலம் !
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 டிச
2012
11:12

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில், ஆருத்ரா தரிசனம் விமரிசையாக நடைபெற்றது.திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவிலில், நடராஜர் சன்னிதியில் டிசம்பர் 28 காலை, 4:00 மணிக்கு பழங்கள் மற்றும் பால் அபிஷேகம் நடைபெற்றது. காலை, 5:30 மணிக்கு, நடராஜருக்கு வெள்ளை ஆடை உடுத்தி தீபாராதனை நடைபெற்றது. பின்னர், நடராஜர் சர்வ அலங்காரத்தில் காலை, 9:00 மணிக்கு வீதி உலா வந்தார். இதேபோல், திருவள்ளூர் பூங்கா நகரில் உள்ள சிவா  விஷ்ணு கோவிலில், நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில், சந்தான விநாயகருக்கு காட்சி அளித்த நடராஜரை, ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். பள்ளிப்பட்டு பள்ளிப்பட்டு சங்கமேஸ்வரர் கோவிலில் நடந்த ஆருத்ரா விழாவை ஒட்டி, டிசம்பர் 27 இரவு சிறப்பு யாகம் நடத்தி, 108 சங்கு அபிஷேகம் மற்றும் உற்சவர் நடராஜ பெருமானுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. டிசம்பர் 28 அதிகாலை சிவபெருமான் மலர் அலங்காரத்தில் காட்சி அளித்தார். இதேபோல, கரிம்பேடு நாதாதீஸ்வரர், சொரக்காய்பேட்டை திருமல்லீஸ்வரர் உட்பட அனைத்து சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரி னம் சிறப்பாக நடந்தது.நகரிநகரியில் உள்ள கரகண்டேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. டிசம்பர் 27 இரவு, 9:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. சத்ரவாடா கிராமத்தில் உள்ள சிதம்பரேஸ்வரர் சுவாமி கோவில், புத்தூர் சதாசிவேஸ்வரர் கோவில், நாராயணவனத்தை அடுத்த கீளகரம் கிராமத்தில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோவிலிலும், ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. திருத்தணி திருத்தணி ம.பொ.சி.,சாலை சுந்தரவிநாயகர் கோவிலில் உள்ள சிவகாமி ஈஸ்வரருக்கு அதிகாலை, 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 9:00 மணிக்கு உற்சவர் திருவீதி உலா நடந்தது. அருங்குளம், நாபளூர் அகத்தீஸ்வரர் கோவிலில், சிறப்பு அபிஷேகம் மற்றும் மாலையில் திருவீதி உலா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயில், 21ம் ... மேலும்
 
temple news
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. திரளான ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar